படகு கட்டும் தொழிற்சாலையில் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!
Friday, January 13th, 2023மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள SLYG நிறுவனத்தின் படகு கட்டும் தொழிற்சாலையில் பயிற்றுவிக்கப்பட்டு, குறித்த தொழிற்சாலையிலேயே தொழில் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ள இளைஞர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியதுடன், அவர்களின் அனுபவங்களையும் கேட்டறிந்தார்.
குறித்த தொழிற்சாலை உருவாக்கப்பட்ட போது, உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு நவீன கடற்றொழில் கலன்கள் தரமாகவும் நியாயமான விலையிலும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொழிற்சாலைக்கான ஆளணி வளங்கள் உள்ளீர்க்கப்படுகின்ற போது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அனைத்து வகையான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தனியார்துறை ஊதிய உயர்வு வெறும் எழுத்து மூல ஆவணம்தானா? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா
அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி விழா...
கடற்படை - நாரா நிறுவனம் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார் குழப்பங்களை தீர்க்கும் வகையில் நடவடிக்கை!
|
|
வெற்றிக்கு கைகொடுங்கள்: எர்காலத்தை வென்றெடுத்து தருவேன் - புதுக்குடியிருப்பில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப...
கிளிநொச்சி இந்து ஆகம கற்கை நெறிக்கான ஸ்ரீ வித்யா குருகுலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பில் ...
பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைக...