நெடுந்தீவின் இளையோர் அமைப்பு வியக்க வைக்கிறது : அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Sunday, July 26th, 2020

வடபகுதியில் பரந்துபட்டளவில் உருவாக்கம் பெறாத இளையோர் அமைப்பு நெடுந்தீவில் பாரிய விருட்சம் போல் அமையப்பெற்றது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவு  இளையர்களின் வாழ்வில் ஒரு ஒளிமயமான  எதிர்காலத்தை அமைத்து தருவேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

நெடுந்தீவு இளையோர் அமைப்புடனான இன்றைய சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “நான் தேர்தல் வெற்றியை மையமாக கொண்டு இந்த கருத்தை உங்களிடம் கூறவில்லை. இது எனது மக்களின் மீதான நான் கொண்ட எனது விருப்பம், அக்கறை கடமை.

எனவே உங்களின் வாழ்வு வளமானதாக அமைய ஈ.பி.டி.பியுடன் இணைந்து பயணிக்குமாறு உங்களை அன்போடு கேட்கின்றேன்” என்றுஅவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு கடற்தொழிலாளர் சமாசங்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்படும் என்று உறுதிளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.
வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
கட்சி அரசியலுக்கு அப்பால் இவர்கள் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் - அனுதாபப் பிரேரணை செய்திக் ...

உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராம விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொட...
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ் மாவட்ட ஒருங்க...