நீர் வேளாண்மையை மேம்படுத்தும் மாபெரும் கருத்திட்டம் வடமராட்சி மண்டான் களப்பு பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுப்பு!
Wednesday, March 3rd, 2021வடமராட்சி – மண்டான் பிரதேச களப்பு பகுதியில் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இறால் குஞ்சுகளை உள்ளீடு செய்யும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் (3) நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது வழிநடத்தலில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைய சுமார் 2.2 மில்லியன் பெறுமதிகொண்ட 40 இலட்சம் இறால் குஞ்சுகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மண்டான் களப்பு பகுதியில் உள்ளீடு செய்யப்பட்டது.
களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்திட்டத்தின் பயனாக மண்டான் பிரதேசதத்தில் வாழும் 270 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கறித்த அமைச்சு பொறுப்பை ஏற்றதன் பிற்பாடு வடக்கு மாகாணத்தின் பல்வேறு நீர் நிலைகளில் கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் வகையில் கடல் உயிரின உள்ளீடு செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் அதனூடாக கடற்றொழிலாளர்கள் தமக்கான வாழ்வாதார பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொண்டமானாறு பாலத்தினை அண்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
குறிப்பாக, தொண்டமானாறு களப்பு பிரதேசத்தில் கடலுணவு வளர்ப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான சாதக பாதகங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|