நிரந்தர நியமனம் பெற்ற சுகாதார பணியாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவித்து பாராட்டிக் கௌரவிப்பு!
Sunday, July 28th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சிகளால் அண்மையில் யாழ் வருகை தந்திருந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களால் நிரந்தர நியமனம் பெற்ற சுகாதார பணியாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாலை சந்தித்து தமது பாரட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பணியளர்கள் யாழ் மாநகர சபை சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையில் நிரந்தர நியமனம் கிடைக்காது நீண்ட காலமாக சுகாதார பணியாளர்களாக கடமையாற்றிய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நியமனங்களின்போது தவறவிடப்பட்ட பட்டதாரிகள் மற்றும் HNDE, HNDI டிப்ளோமாதாரிகள் தமக்கான நிரந்தர நியமனங்களை உறுதி செய்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த குறித்த தரப்பினர் அமைச்சருக்கு தமது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளை எடுத்துக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


