நிந்தவூர் பிரதேசத்திற்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் கடலரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்!

Friday, September 2nd, 2022


…….
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்திற்கு அச்சறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கடலரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக தீர்த்து வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் வை.எல். சுலைமான் லெப்பை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நிந்தவூர் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய நிலையிலேயே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். – 02.09.2022

Related posts:

35 அடிக்கு மேற்பட்ட நீளமான மீன்பிடி படகுகளுக்கு அரச மானியம் வழங்க நடவடிக்கை - டக்ளஸ் தேவானந்தா ஏற்பா...
அனைத்து அரசியல் தளங்களிலும் கட்சியைநிலை நிறுத்த அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் - செயலாளர் நாயகம் ...
ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்த...