நல்லூர் பிரதேச சபையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Saturday, July 25th, 2020

நல்லூர் பிரதேச சபையினால் கொறோனாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள்  காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை வளாகத்தில் வாழைப்பழ விற்பனையிலீடுபட்டுவருகின்ற வியாபாரிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி அமைச்சர் அவர்கள் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்த நிலையில் இன்று குறித்த விவகாரம் தொடர்பான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பில், நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து  நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளருக்கு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts:

வடபகுதி  போக்குவரத்து சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும் - நாடாளுமன்றில் ட...
மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதார அச்சுறுத்தல் - அமைச்சர் டக்ளஸிடம் பிரதேச மக...
வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேச நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!

அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுளால் எமது கடல் வளம் சுரண்டப்படுகின்றது -நாடாளுமன்றத்தில் டக...
எமது நாட்டின் வளங்களுக்கு ஏற்ற வகையில் வன விலங்குகளுக்கான கட்டுப்பாட்டு முறைமைகள் தேவை - டக்ளஸ் தேவா...
அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர் ட...