நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பு – புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்படும் தொட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, March 10th, 2022

நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை மேற்கொள்வதற்கான மீன் குஞ்சுகளை உருவாக்கும் நோக்குடன் புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்பட்டு வருகின்ற தொட்டிகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைபெற்று வருகின்ற கட்டுமானப் பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட சுமார் 30 தொட்டிகளை உள்ளடக்கிய நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான குறித்த கட்டமைப்பு, சீரான முகாமைத்துவம் இன்றி பாழடைந்து காணப்பட்டது.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சராக கௌரவ டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதும், சமூக அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, புதுமறிப்பு நன்னீர் மீன் வளர்ப்பு தொட்டிகள் புதுப் பொலிவு பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும்!
எமது கரங்கள் பலப்படுத்தப்படுவது மக்களுக்கான பலன்களாவே மாறும் - சாவக்கட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
மக்களின் நலன்களை பாதுகாக்கும் தனித்துவமான நாடாகவே இலங்கை இருக்கும் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவ...

தொழில்வாய்ப்பு கேட்பதால் இன உரிமையை அடகு வைக்க வேண்டி வரும் என சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் போல் கூ...
உள்ளூர் உற்பத்திகளை பாதிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க கூடாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல...
அமரர் சிவஞானசோதியின் இழப்பு எனக்கு மட்டுமல்லாது இலங்கைத் தீவுக்கும் பேரிழப்பு – அஞ்சலி உரையில் அமைச்...