தோழர் நடுநாயகமூர்த்தியின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!

Saturday, August 26th, 2017

அமரர் தோழர் வேலுப்பிள்ளை நடுநாயகமூர்த்தியின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம்  சாத்தியதுடன் கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சுழிபுரத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா அன்னாரின் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சுகயீனமுற்றிருந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த தோழர் நடுநாயகமூர்த்தி கடந்த 23 ஆம் திகதி காலமானார்.

இந்நிலையில் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபின்னர் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும்  உற்றார் உறவினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான தவநாதன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் திலக், யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காலஞ்சென்ற தோழர் நடுநாயகமூர்த்தியின் இறுதிக்கிரியைகள் நாளையதினம் (27) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: