தோழர் ஜெகனின் தந்தையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, November 28th, 2021

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஜெகனின் தந்தையார் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களின் பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்பதாக வயது மூப்பின் காரணமாக சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் கடந்த 25.11.2021 அன்று காலமானார்.

இந்நிலையில் இன்றையதினம் (28) வட்டுக்கோட்டையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

Related posts:


நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல : ஆட்சிபீடம் ஏற்றிய தமிழ்த் தரப்பினருக்கும் எத...
கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் நிதியை வெளிப்படை...
பலமான எதிர்காலத்தினை உருவாக்கும் முயற்சிகளின் போது எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் உடைத்து முன்னேறு...