தேசிய எழுச்சி மாநாடு வெற்றி பெற ஜனாதிபதி வாழ்த்து!

Sunday, May 8th, 2016

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சந்தித்த போது அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தேசிய எழுச்சி மாநாடு வெற்றி பெற ஜனாதிபதி அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: