திருகோணமலைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, January 6th, 2018

கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்  செல்லும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொள்ளும் அதேவேளை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயவுள்ளார்.

அத்துடன் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் வெற்றி வாய்ப்பை மக்கள் உறுதி செய்யும் பட்சத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டுமாணம் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமை பிரச்சினைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச சபை வேட்பாளர்களையும் சந்தித்து கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

26654842_1636758329696581_158056125_o

Related posts:

உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று மக்களை கையேந்து...
மக்களின் நலனுக்காக சக தரப்பினருடன் கைகோர்க்க தயாராகவே உள்ளோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...
பளை கரந்தாய் பகுதி LRC காணிகளில் வசிக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

முன்னாள் போராளிகளின் கடன் இரத்தாகும் : டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்...
இலவசமாக கிடைக்கின்ற கல்வியை எமது மணவர்கள் சரியாக பெற்று தங்களை மட்டுமல்லாது தமது சமூகத்தையும் உன்னதம...
தரமுயர்த்தப்பட்டபோதும் மீண்டும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது - தீர்வு தாருங்கள் என புதிதாக உ...