தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகளும் மக்களின் நலன்சார்தவை அல்ல – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Saturday, January 14th, 2023தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகள்களும் மக்களின் நலன்சார்தவை அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழில் நேற்றையதினம் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகள்களும் கடந்த காலங்களைப்போன்று மக்களின் நலன்சார்தவையாக இல்லாது வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதாகஇருக்கும். அவர்களின் நோக்கமும் அதுதான். அன்றுபோல் இன்றும் மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது.
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளகின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
000
Related posts:
புலிகளின் தலைமை இல்லை என்பதால் தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தமல்ல -...
எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாடு!
வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|