தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்திற்கும் தீர்வு காணவேண்டும் என்பதில் ஜனாதிபதி ஆர்வமுடன் இருக்கின்றார் – திருக்கோணேஸ்வரர் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளின் பின் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023

தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணவேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆர்வமுடன் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நன்மை வேண்டி திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முன்பதாக இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை திருகோணேஸரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மங்கள வாத்தியங்களுடன் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டிருந்தார்.

இன்று காலை நடைபெற்ற குறித்த பூசை வழிபாடுகள் இலங்கையின் 75 ஆவது சுதந்திர  தினத்தை முன்னிட்டு, நாட்டிற்கும் நாட்டின் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் மாணவிகளின் பஜனை நிகழ்வுகளிரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்!
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிள...
விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை - சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள்...

மக்கள் மீதான எமது அக்கறையே நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைந்தது – டக்ளஸ் எம்...
தொழிலுக்கான தடையை நீக்கித் தாருங்கள் - முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!
கௌரவமான நீதியைப் பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமல் போனோரின்; உறவினர்கள் க...