தனியார் நிறுவனம் சட்ட விரோத காணி அபகரிப்பு – தடுத்து நிறுத்துமாறு முல்லைத்தீவு தியோநகர் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Thursday, February 16th, 2023பிரதேச கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில், முல்லைத்தீவு – தியோநகர் கடற்கரை பகுதியில் சுமார் 58 ஏக்கர் நிலப் பகுதியை தனியார் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பிரதேச மக்கள், குறித்த சட்ட விரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர், பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்
இதனிடையே
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். – 16.02.2023
000
Related posts:
|
|