டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!

Saturday, September 3rd, 2022

!
……….
டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகத்தின் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டதுடன், துறைமுகத்தின் முகாமையாளர் உட்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

நாட்டிற்கு  கடலுணவு ஏற்றுமதி ஊடாக கணிசமானளவு அந்நியச் செலாவணியை பெற்றுத் தருகின்ற பலநாள் மீன்பிடிக் கலன்களின் பிரதான இறங்குதுறையாக விளங்குகின்ற டிக்கோவிற்ற துறைமுகத்தில் காணப்படும்  குறைபாடுகள் தொடர்பாக, பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்களினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்றைய அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – 03.09.2022

Related posts:

பொங்கல் திருநாள் தமிழர்களுக்கு - புது வழியைப் பிறக்கச் செய்யட்டும் - தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியி...
“கம்பரலிய” திட்டம் கண்கட்டி வித்தையாகவே நடந்தேறுகின்றது - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெ...
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி – தேசிய நிகழ்ச்சி திட்டத்தை யாழ் மாவட்டத்தில் ஆரம்பி...