டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு!
Wednesday, August 30th, 2017ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு கட்சியின் தலைமைச் செயலகத்தில் தற்போது நடைபெறுகின்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம் முற்பகல் 10 மணிக்கு குறித்த பேராளர் மாநாடு நடைபெறுகின்றது.
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடனும் ஆலோசனையுடனும் உருவாக்கப்பட்ட கட்சியின் மகளிர் அணியின் பேராளர் மாநாடு முதன் முறையாக இன்று நடைபெறுகின்றது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெறும் இப்பேராளர் மாநாட்டில் பங்குபெறும் பொருட்டு யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அணியணியாக மகளிர்கள் இப்பேராளர் மாநாட்டில் பங்கெடுக்க இங்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - அல்லைப்பிட்டி...
அண்ணமார் சிவகாமி அம்பாள் ஆலய கட்டுமாணப்பணிகள் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது அபிவிருத்திக்கும் முழு...
விழித்துக் கொண்டதால் நான் பிழைத்துக் கொண்டேன்: கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!
|
|