சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் வேலைத்திட்டமா? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, August 9th, 2018
தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்காக நிறுவப்பட்டது என்பதைவிட, சுயாதீன ஆணைக்குழுக்களை இதோ அமைத்துவிட்டோம் எனக் கூறிக் கொண்டிருப்பதைவிட, இந்த சுயாதீன ஆணைக்குழுக்களால் பயன்கள் ஏதும் இருக்கின்றவா? என்பது குறித்தே அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும். தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசியலமைப்பின் கீழ் பிரேரணை, பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஒரு பக்கமாக அதன் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் ஊதியங்களை அதிகரிப்பது, கொடுப்பனவுகளை அதிகரிப்பது, மறுபக்கமாக மக்கள் மீது வரிகளை அதிகரிப்பது என இருந்துவிடக் கூடாது.
அதேபோன்று மேற்படி சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தேவையான வளங்களை வழங்க வேண்டும். குறிப்பாக, இலஞ்;சம் மற்றும் ஊழல் விசாரணைக்கு குழு தொடர்பில் பார்கின்றபோது, இந்த ஆணைக்குழு சுயாதீனமாகும்போது, தமக்குத் தேவையான தரமான பணியாளர்களைத் தமக்குத் தேவையானவாறு இணைத்துக் கொள்வதற்கு முடியாதிருப்பதாகவும், தம்மிடம் நிதி சுயாதீனத் தன்மையும் இல்லை எனவும் மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
இவரது கூற்றின்படி, கொங்கோ நாட்டில் 6 மில்லியன் மக்கள் இருக்கும் நிலையில், அந்த நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளாக 1000 பேரும், தடுப்புப் பிரிவில் 220 பேரும் உள்ள நிலையில், இலங்கையில் 21 மில்லியன் மக்கள் இருக்கின்ற நிலையில் பொலிஸாரிடமிருந்து கைமாற்றாகப் பெறப்பட்ட 200 விசாரணையாளர்களே இருப்பதாகத் தெரிய வருகின்றது. மேலும், உலகின் அநேக நாடுகளில் உயர் தர சட்டத்தரணிகள் மேற்படி பணிகளில் இணைத்துக் கொள்ளப்படுகின்ற நிலையில், இலங்கையில் அந்த தரம் குறைந்தே உள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றார். சில அரச அதிகாரிகளே இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பிலான ஆணைக்குழுவில் சில தீரமானங்களை எடுப்பதாகவும் கூறுகின்றார்.
இத்தகைய நிலை இருக்கின்றபோது, மேற்படி ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை தொடர்பில் கேள்விக் குறியுடனேயே பார்க்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில்தான், இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிடம் தான் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் காணாமற் போயுள்ளதாக அண்மையில் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் ஊடகங்களில் தெரிவித்திருகின்றார்.
எனவே, இந்த சுயாதீன ஆணைக்குழுக்களின் இயங்கு நிலை தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திதுகின்றேன்.
Related posts:
|
|