சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு!

Friday, March 27th, 2020

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பேருவளை துறைமுகத்தின் சுகாதார செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளார்.

தற்போது நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்று தெர்டபான விழிப்புணர்வுகளை அரசு பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் பேருவளை துறைமுகத்தின் சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர் சமூகம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளிடையே காணப்பட்ட சுமுகமற்ற நிலைமைகளால் பல குழப்பநிலைகள் இங்கு காணப்பட்டன.

இந்நிலையில் இது தொடர்பில் நேற்றையதினம்  நேரில் சென்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இருதரப்பினரது முன்வைத்த பிரச்சினைகளையும் கருத்துக்களையும் ஆராய்ந்து தற்போதைய நாட்டின் நிலைமைகளை கருத்தில் கொண்டு குறித்த இரு தரப்பினரது ஆலோசனைகளுக்கும் அமைய துறைமுகத்தின் சுகாதார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதை துறைமுக நிர்வாகம் கடற்றொழிலாளர் சமூகம் ஏற்று நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் ...

செயற்றிறனற்ற வடக்கு மாகாண சபையால் எமது மக்களின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது - நாடாளுமன்றில் டக...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லை மாவட்டத்திற்கு விஜயம் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!
21 ஆவது திருத்தச்சட்டத்துக்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி - டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 5 அமைச்சர்களை ...