சீநோர் நிறுவனத்தின் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட மீன் விற்பனை நிலையம் மற்றும் படகுகள் கடற்றொழில் அமைச்சிடம் கையளிப்பு!

Thursday, December 14th, 2023

நோர்வேயின் நிதி உதவியுடன் எப். ஏ. ஓ. நிறுவனத்தின் திட்டமிடலுடன் கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள படகு கட்டும் நிறுவனமான சீநோர் நிறுவனத்தின் வடிவமைப்பில்  தயாரிக்கப்பட்ட மீன் விற்பனை நிலையத்தையும், படகுகளையும் கடற்றொழில் அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று மோதரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது உணவு மற்றும் விவசாய மேம்பாட்டு பாதுகாப்பு அமைப்பான (FAO) அமைப்பினால் கடற்றொழில் அமைச்சிடம் இரண்டு படகுகளும், 30 தயாரிப்பு மீன் விற்பனை நிலையங்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: