சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

Monday, November 7th, 2022

சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.  

சிலாபம் கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த எரிபொருள் பம்பி பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிலபாம் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

குறிப்பாக சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தினுள் ஒதுக்கப்படும் மணலை அகற்றுவதற்கான வேலைத் திட்டம், உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற பொறிமுறையை அறிமுக...
நித்திய வெளிச்சத்தில் தேசம் விடியட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
வடக்கு கிழக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸின் காலத்தில் புத்துணர்ச்சியடையும் - பிரதமர் மஹிந்த நம்பிக்...