புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் களவிஜயம் – முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஆராய்வு!
Sunday, December 3rd, 2023கிளிநொச்சி கரைச்சி பிரதேச சொயலக பிரிவுக்குட்ப்பட்ட புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு மேலும் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று 03.12.2023 நடைபெற்றது.
முன்பதாக தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப்பாதுகாப்பு மற்றும் போசணையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்ததான மீன் குஞ்சுகளை வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 19.11.2023 ஆம் திகதி புதுமுறிப்பு மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு 150 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. அதற்கு மேலதிகமாக இன்றைய தினம் மேலும் 50 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.
குறித்த நிகழ்வில் தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பமாகிய நிலையில், அதன் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஆராயும் நோக்கில் இன்று குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்
குறித்த விஜயத்தில் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டப் பணிப்பாளர் மற்றும் நெக்டா வடமாகாண பணிப்பாளர், பொறியியலாளர்கள் வருகை தந்திருந்த நிலையில் மீன் உற்பத்தி நிலையத்தின் வளர்ச்சியை மேலும் விணைத்திறனுடன் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|