சாவகச்சேரி சந்தை வியாபாரிகளது பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, February 7th, 2018

சாவகச்சேரி சந்தை கடைத்தொகுதிக்குச் சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அங்கு வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஒரு தொகுதி வர்த்தகர்களைச் சந்தித்து அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இன்று காலை குறித்த பகுதிக்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.

அத்துடன் மரக்கறிச் சந்தைப் பகுதிக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன் பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு சந்தைக்கு வருகை தந்த மக்களுடனும் கலந்துரையாடினார்.

இதனிடையே சந்தை வளாகத்தில் பித்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடிய அவர் நீங்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் மட்டுமன்றி உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கும் சாவகச்சேரி நகரசபையை நாம் வெற்றெடுக்கும் பட்சத்தில் தீர்வுகாணமுடியும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts:

கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்- டக்ளஸ் தேவானந்தா!
முதல்வர் ஸ்ராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு - கடற்றொழிலாளர் விவகாரத்தையும் தீர்க்குமாறு வ...
இலங்கை கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தி...

காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடு...
புது மகிழ்வும் புது நிமிர்வும் புத்தாண்டின் வரவாகட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!
அமைச்சர் ரமேஸ் பத்திரனவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிருத்திக் கூட்டு...