முதல்வர் ஸ்ராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு – கடற்றொழிலாளர் விவகாரத்தையும் தீர்க்குமாறு வலியுறுத்தல்!

Saturday, August 28th, 2021

தானாடா விட்டாலும் தசையாடும் என்பது தமிழக முதலமைச்சரினால் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் தன்னுடைய நன்றியினையும் தமிழக முதல்வர் மு.க.  ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தமிழக மீனவர்களுக்கு மாற்று தொழில் முறைகளை ஏற்பாடு செய்து வழங்குவதற்கும் தமிழக முதல்வர் நடவடிககைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் தங்கி இருக்கின்ற இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக தமிழக முதல்வரினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக இலங்கை கடற்றொழில் அமைச்சரினால் இன்று(28.08.2021) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –

“இலங்கைத் தமிழ் மக்கள் தஞ்சம் தேடி வந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இரண்டு கரங்கினாலும் அரவணைத்து பாதுகாப்பு அளித்தவர்கள் தமிழக மக்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எலலாம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் தங்களால் முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்கியிருக்கின்றார்கள். அதேபோன்று ஏனைய அரசியல் தலைவர்களும் தங்களுடைய தார்மீக ஆதரவினை வெளிப்படுத்தி வந்தனர்.

தான் ஆடா விடடாலும் தசையாடும் என்பது போன்று, தமிழக மக்கள் குரல் கொடுப்பார்கள் – கரம்  நீட்டுவார்கள் என்ற நம்பிக்கை, இலங்கை  தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் ஆழமாக இருக்கின்றது.

அந்த நம்பிக்கயினை நிரூபிக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் நண்பர் ஸ்ராலினின், இலங்கை தமிழ் மக்கள் தொடர்பான நிதி ஒதுக்கீடுகளும் அறிவிப்புக்களும் அமைந்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது.

மீண்டும் இலங்கைக்கு திரும்பி வருவதற்கு விரும்புகின்ற எமது மக்களுக்கு கௌரவமான வாழ்வியலை ஏற்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்வதற்கு தயாராகவே இருகின்றேன் என்ற செய்தியை இத்தருணத்தில் தெரிவிப்பதுடன், இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழக முதல்வர் தீர்க்கமான கரிசனை செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி முறைகளினால் எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன், இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.

தமிழகத்தில் இருக்கின்ற சிலரின், தீர்க்கதரிசனமற்ற – சுயநலன் சார்ந்த தீர்மானத்தினால், தமிழகத்தினை சேர்ந்த எமது  உறவுகளான ஆயிரக்கணக்கான குடும்பங்கள், இலங்கை கடற் பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபடுவதை தமது ஜீவனோபாயமாகக் கொண்டு வாழ்ந்து வருவதை நான் அறிவேன்.

எனவே அவர்களுக்கு, ஆழ்கடல் மீன்பிடி போன்ற மாற்றுத் தொழில் முறைகளை ஏற்பாடு செய்து வழங்குவதன் மூலம், இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத தொழில் முறைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த முடியும்.

ஆகவே, இலங்கை கடற்பரப்பை நம்பி வாழுகின்ற தமிழக கடற்றொழிலாளர்களுக்கு மாற்று தொழில் முறைகளை வழங்குது தொடர்பாக தமிழக முதல்வர், இந்திய மத்திய அரசாங்கத்துடன் தீர்க்கமான பேச்சுக்களை முன்னெடுத்து, விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன்மூலம், இலங்கையின் வடக்கு கடற்றொழிலாளர்களின் வளங்களும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுவதுடன், எமது உறவுகளான தமிழகத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கும் நீண்ட காலத் தொழில் உத்தரவாதத்தினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

000

Related posts:

தவிர்க்க முடியாத சூழல் ஒன்றில் நாமும் அன்று  ஆயுதம் ஏந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் - நாடாளும...
நில மெஹெவர திட்டத்தின் செலவீனங்களுக்கென பொது மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பு இடம்பெற்றதா? நாடாளுமன்...
இந்நியாவில் தடுத்துவைக்கப்பட்டுள் வாழைச்சேனை மீனவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுதலை - உறவினர்கள் ...

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறை மீது சுமத்திவிட நாம் தயாரில்லை - டக்ளஸ் தேவானந்தா!
உடுவில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கலை அமைச்சர் டக்ளஸ் தேவானந...
எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட...