சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அமைச்சரவை அங்கீகரித்தது.

Tuesday, November 27th, 2018

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த விசேட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இன்று(27.11.2018) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இம்மாதம் 17ஆம் திகதி அமைச்சரைச் சந்தித்த கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப சுவாமிகளின் பிரதிப்குமார் தலைமையிலான யாத்திரைக்குழுவினர், சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கையிலுள்ள அனைத்து சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் சார்பில் விடுத்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

46398518_2160693817315657_8940347277029933056_n-1

46380947_257610858257528_2076579656407973888_n

46346336_1429492070526831_1550073423911190528_n

Related posts:

யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தாவிடம் முழ...
E.P.D.P.யின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையி...
திலீபனை நினைவு கூறும் விடயத்தை தூக்கிப் பிடிப்பது மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கு அபகரிப்பிற்காகவே ...