கோட்டபயவின் வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்களாவோம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, October 31st, 2019


தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மிக குறுகிய காலப் பகுதிக்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச உறுதியளித்துள்ள நிலையில்ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு தொடர்பிலான உடன்படிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கைச்சாத்திட்டுள்ளது.

இன்று முற்பகல் கொழும்பு மன்ற கல்லூரியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் வடக்கு கிழக்கு உள்ளிட்ட 17 சிறுபான்மை கட்சிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கைச்சாத்திட்டார்.  

இதன்பிரகாரம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதிய கூட்டமைப்பின் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.

கூட்டமைப்பின் தவிசாளர், உப தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர்கள் ஆகிய ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள், தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ளனர்.

Related posts:

நிமிர்ந்தெழும் காலத்தை வெல்ல நிரந்தர ஒளியேற்றுவோம்! தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!
அரசியல்வாதிகளைப்போல் அரச நிறுவனங்களும் பயனற்றதாக இருந்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
மக்களின் எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தியதாகவே யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் அமை...