கிளிநொச்சி அம்மாச்சிக்கு நிதியுதவி வழங்கிய அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 27th, 2023

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதிப் பங்களிப்பில், கிளிநொச்சி  நகரில் அமைந்துள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தில் கண்ணாடித் தடுப்புக்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொள்ளுகின்ற சந்தர்ப்பங்களில், பெண்களுக்கான வாழ்வாதார நோக்கோடும் மக்களுக்கு போசாக்கான சுத்தமான பாரம்பரிய உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும்  செயற்பட்டு வருகின்ற அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தில் உணவு உட்கொள்வதுடன் உணவகத்தின் செயற்பாடுகள் மற்றும் பணியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக அவதானம் செலுத்துவது  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  வழக்கம்.

இந்நிலையில், அம்மாச்சி உணவகத்தின் சுகாதார ரீதியான பாதுகாப்பையும் சமூக இடைவெளியையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அம்மாச்சி பணியாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடற்றொழில் அமைச்சர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிதியிலிருந்து கண்ணாடி தடுப்பு அமைப்பதற்கான நிதியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தசானந்தா ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்த...
நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை!