காஸ் சிலிண்டருக் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கு நானே பொறுப்பு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, September 10th, 2024


~~~~~~

காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு மக்கள் வழங்குகின்ற வாக்குகளுக்கான தார்மீகப்  பொறுப்பினை ஏற்று மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி வைப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி நகரில் இ்ன்று இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருத்து உரையாற்றும் போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம்   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

“ஈ.பி.டி.பி. கட்சியின் அழைப்பினை ஏற்று, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமான என் மீது நம்பிக்கை வைத்து ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருக்கிற கிளிநொச்சி மக்களுக்கிய உங்களுக்கு நன்றியை தெரிவத்துக் கொள்கின்றேன்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எங்களின் கோரிககையை ஏற்று ரணில் விக்கிரமசிங்கவின் காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றியடைய செய்ய வேண்டும்.

அவர் வெற்றியடைந்ததும், அவருக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை வழங்குகின்றேன்.” என்று தெரிவித்தார்.

Related posts:


வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளது வாழ்வியல் பாரபட்சமின்றி மேம்படுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்ற...
குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் செயல...
நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம்!