கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோரிக்கை!

Tuesday, January 4th, 2022

கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி வலை தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி தலைமையில் இன்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்த கற்பிட்டி கடற்றொழிலாளர் பிரதிநிதிகளினால் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

கடற்பிட்டியை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான சுமார் 23 இழுவைமடி படகுகள் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் இறால் பிடியில் ஈடுபட்டு வந்ததாகவும் , தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுச் சூழல் தொடர்பான நீதிமன்ற வழக்கு காரணமாக, தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், குறித்த வழக்கு தொடர்பாகவும் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Related posts:

‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படவுள்ளது? – நாடாளுமன்...
எமது பூர்வீக இருப்பிடங்களை பாதுகாத்து தாருங்கள் : டக்ளஸ் எம்.பி.யிடம் பாதிக்கப்பட்ட குருநகர் பகுதி ம...
அமைச்சர் பவித்ராவுடன் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுங்கள் - அதிகாரிகளுக்கு அம...

ஊர்காவற்றுறை மக்களது குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி...
பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் - அமைச்சர் ...
பொன்னான வாய்ப்பு கிடைத்தது - எம்மை தவிர ஏனைய அனைவரும் அதை நிராகரித்திருந்தனர் – இதுவே இன்றைய சாபக்க...