கண்டாவளையில் ஈ.பி.டி.பியின் தேர்தல் அலுவலகம் – திறந்து வைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, October 17th, 2024

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்திற்கான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகம் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

எதிர்வரும் கார்த்திகை மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டே குறித்த அலுவலகம் கண்டாவளை நகரின் மத்தியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கட்சியின் இணைப்பாளரும் வேட்பாளருமான வை. தவநாதன்   கண்டாவளை பிரதேச செயற்பட்டாளர் கமலன் மற்றும் பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்ிபடத்தக்கது

000

Related posts: