கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் இன்று தொற்று நீக்கம்!

Monday, May 24th, 2021

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம்  இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொறோனா வைரஸ், நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுதொடர்பாக, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இறுக்கமான சகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிராந்திய சுகாதாரத் தரப்பினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கடற்றொழில் அமைச்சரின் அலவலகத்தினை தொற்று நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நாடு இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்த...
ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்...
வழங்கப்படும் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு - அம...