வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
Thursday, May 13th, 2021வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய செயற்பாட்டு மையத்தின் பணியாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
கடற்றொழில் அமைச்சின் அங்கமாக இருக்கி்ற வடகடல் நிறுவனத்தின் யாழ். செயற்பாடுகள் தொடர்பாகவும் பணியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர், குறித்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடினார்.
மேலும், யாழ். பணியாளர்களின் பிரச்சினைகள் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயந்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
பறிபோகவுள்ள வாழ்வாதாரத்தை மீட்டுத் தாருங்கள் - யாழ் பேருந்து நிலைய சிறுகடை வியாபாரிகள் டக்ளஸ் எம்.பி...
நடைபெறுகின்ற விசாரணைகள் எந்தளவிற்கு நம்பகத் தன்மை வாய்ந்தது? டக்ளஸ் எம்.பி. கேள்வி.
|
|