கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் பேருந்தில் பயணம்!

Friday, March 3rd, 2023

கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார்  பேருந்தில் பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.

குறித்த பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை –  இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், இலங்கையின் வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் இடையிலான நல்லெண்ண சந்திப்பு ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே கச்சதீவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வாள் வெட்டும், கல்வியில் பின்னடைவும் எமது அடையாளமல்ல – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
யாழ். மாட்டின் குருமடத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம...
அனர்த்த முகாமைத்துவ அரச நிதியை நிவாரணமாக வழங்க தீர்மானம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!