ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Sunday, September 11th, 2016ஐக்கியதேசியக் கட்சியின் 70ஆவது மாநாடு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில்விக்கிரம சிங்க தலைமையில் நேற்று பொரளை கெம்பல் மைதானத்தில் (10) இடம்பெற்றது.
நேற்றுக்காலை நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த அழைப்பை ஏற்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பங்குபற்றியதுடன் ஆசிச்செய்தியையும் வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அரசியல் பிரமகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாம் செய்த பணிகளுக்கு பனை ஆராய்ச்சி நிலையமும் சாட்சி சொல்லும்! -டக்ளஸ் தேவானந்தா!
கலை, கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றித்து செயற்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
மாகாண சபைகளுக்கு மேலும் வலுச் சேர்க்க வேண்டும் - அரசியலமைப்பு நிபுணர் குழுவிற்கு ஈ.பி.டி.பி பரிந்துர...
|
|