இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம்: விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 16th, 2020


இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுகின்றபோதும் தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பாவித்து கடல் வளங்களையும் அழித்தும் வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறலாமமென எதிர்பார்ப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

அண்மையில் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது,

இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு சுமூகமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் பேச்சுவார்த்தைகளை நாம் ஆட்சியில் இருந்தபோது ஆரம்பித்திருந்தோம். அதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஆட்சிப் பீடம் ஏற்றப்பட்ட ஆட்சியாளர்கள் இவ்விடயத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவில்லை.

மீண்டும் எமது ஆட்சி அமையப் பெற்றுள்ள நிலையில், மீன்பிடி அமைச்சராக பாரிய பொறுப்பை இந்திய மீன்பிடியாளர்களின் பிர்ச்சினை மட்டுமல்லாது, மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் வாழ்வை வளப்படுத்திக் கொடுக்க நான் பாடுபடுவேன் என்ற நம்பிக்கையில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் என்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

Related posts:

யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...
எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் வல்லமை உங்களிடமே உள்ளது : டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறை மக்கள் சு...
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சேதாரம் இல்லை - அடித்து சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

வடக்கில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.
வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் - நாடாளுமன்றில் செயலாளர் ந...
கடந்த ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் - பாரிய பின்னடைவை சந்தித்த வடகடல் நிறுவனத்தை மீண்டும் சிற...