அரசியல் ரீதியிலான பயமே ஈ.பி.டி.பியை சக தமிழ் கட்சிகள் அச்சத்தோடு பார்ப்பதற்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Friday, November 4th, 2022ஈ.பி.டி.பி யை சக தமிழ் கட்சிகள் அச்சத்தோடு பார்ப்பது, அரசியல் ரீதியிலான பயமே தவிர, வேறு எந்த காரணமும் அல்ல என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, இந்த உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி பிரதிநிதிகள் அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது எதிர்கால நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடிய வேளையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மேற்கொண்ட கருத்தை தெரிவித்தார்.
இதனிடையே
வன்னி மாவட்ட மட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்றி வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்த கிளியூரான் விளையாட்டு கழகம், தாங்கள் பெற்றுக்கொண்ட வெற்றிக் கிண்ணத்துடன் மரியாதை நிமித்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வழித்தட அனுமதிக்கான அறவீட்டை மேலும் இரண்டு மாதங்களுக்கு சலுகையாக பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் த...
நாயாறு - நந்திக்கடல் - காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி: அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!
தமிழ் பேசும் இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்க...
|
|