“நீ கூறுகிறாய் இறந்துவிட்டாயாம் நீ” – நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்குபற்றவுள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, February 19th, 2023

கவிஞர் இப்னு அஸுமத்தின் “நீ கூறுகிறாய் இறந்து விடாயாம் நீ” எனும் நூல் வெளியீட்டு விழாவின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவுள்ளார்.

சிங்கள கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதைகளின் தொகுப்பாக வெளிவரவுள்ள இந்நூல், கொழும்பு 7, கிரேகரிஸ் வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் எனப்படும் இந்திய கலாசார நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(19.02.2023) மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதான மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வருகின்ற கவிஞர் இப்னு அஸூமத்தின் இந்த நூல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: