அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – புத்தளம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு உனடித் தீர்வு!

Friday, August 6th, 2021

புத்தளம் கற்பிட்டி, கண்டக்குடா பிரதேசத்தில் கூட்டு வலைளைப பயன்படுத்தி இறால் பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் ஏற்பாட்டில் இன்று (06.08.2021) பிரதேச கற்றொழிலாளர்கள் சந்தித்து கலந்துரையாடியதை தொடர்ந்து குறித்த தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், கடந்த 25 வருடங்களுக்கும் அதிகமாக குறித்த பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கூட்டு வலையைப் பயன்படுத்தி இறால் பிடிப்பதை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடற்றொழில் திணைக்களத்தினால்,  அனுமதியற்ற முறையில் குறித்த தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட வலைகளை அகற்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களினால் கடற்றொழில் அமைச்சரிடம் எடுத்துக் கூறப்பட்டது.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்திற் கொண்டு, கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தளைகளுடனான அனுமதியை வழங்குமாறு அதிகாரிகளுக்கு தெரவித்தார்.

மேலும், கடற்றொழில் திணைக்களத்தினால்  எடுத்துச் செல்லப்பட்ட  வலைகளையும் மீளப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினல் உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வாகரை பிரதேசத்தில் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறாக காணப்படுகின்ற மணல் திட்டுக்களை அகற்றுதல் மற்றும் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நீர்வேளாண்மை தொடர்பான அபிவிருத்தி திட்டங்களில் வேகப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு போன்றவை தொடர்பாக கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுஜீவ ரணவக்கவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்

Related posts:

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வரும்வரை அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் - செயலாளர் நாயகம...
அரசியல் பயம் கொண்டவர்களினாலேயே அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது: இளைஞர் மாநாட்டில் அமைச்சர் டக...
வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் ஊர்காவற்துறை, வேலணை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...