அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய மீனவர் மஹா சமேளனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம்!

Saturday, February 5th, 2022

தேசிய மீனவர் மஹா சமேளனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம், குறித்த சமேளனத்தின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், எதிர்காலத்தில் சமேளனத்தின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பாகவும், கடற்றொழில் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

சமேளனத்தின் செயலாளர் நெல்சன் எதிரிசிங்கவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சமேளனத்தின் கடற்றொழில் மாவட்ட பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

Related posts:


அனலைதீவு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
வடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது - நாடாளுமன்றில் டக்ளஸ...
பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்...