அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலகத்தில்!

Thursday, March 18th, 2021

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்து.

இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுனர், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் மற்றும் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிகளும் கலந்து கொண்டனர்.

வ்வுனியா மாவட்டத்தில் காணப்படும் குளங்களில் நன்னீர் மீன்வளர்ப்பை ஊக்குவிப்பது, விவசாயிகளை ஊக்குவிப்பது, வளங்களை பயன்படுத்தி கைத்தொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் அடிப்படையில் பரிந்துரைகளும் ஆலோசனைகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கப்பட்டது.

Related posts:

கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களே காரணம் - செயலாளர் நாயகம் டக்...
மக்களின் நம்பிக்கையை எவரும் வென்றெடுக்கவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவ...
தமது பூரவீக காணிகள் விடுவிக்கப்படுவதை விரைவுபடுத்துமாறு மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் பிரதிநி...

வடக்கின் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் வடக்கின் இளைஞர் யுவதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. ...
எதிரியை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை கொலை முயற்சி குற்றவாளி தொடர்பில் டக்ளஸ...
அதிகாரத்தை தாருங்கள் : நான் உங்கள் எதிர்காலத்ததை வென்றெடுத்துத் தருவேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!...