அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

Tuesday, February 13th, 2024

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடம்பெற்றது.

இதன்போது பிரதேச ரீதியில் இனங்காணப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்கீகாரங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் இன்றைய கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் , வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள், கடற்றொழிலாலாளர் கூட்டுறவு சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புக்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

000

Related posts:

கையேந்தும் வாழ்வு நிலையில் இருந்து மாற்றம் காண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி அவசியம் - தம்பிலு...
டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ள...
நான் மன்னித்துவிட்டேன் - சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அந்தப் பெண்மணியின் விடுதலைக்கு நடவடிக்கை எடு...

காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசுகள் அமைத்த விசாரணை ஆணைக்குழுக்களின் பெறுபேறுகள் பூச்சியமாகவே உள்ளது -...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாதர் நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பண நிழ்வு ய...
இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்தித்து கலந்த...