அமைச்சர் டக்ளஸ் காத்திரமான நடவடிக்கை – வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலைத் தொழில் கணிசமானளவு கட்டுப்பாட்டுக்குள் – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் தெரிவிப்பு!
Friday, May 5th, 2023கடற்றொழில் அமைச்சரின் காத்திரமான நடவடிக்கைகள் காரணமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சுருக்கு வலைத் தொழில் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் குறித்த சட்டவிரோத தொழில்முறையை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான இன்றைய கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே சக்கோட்டை மற்றும் இன்பசிட்டி கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தாங்கள் எதிர்கொள்ளும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாகவும், தாங்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்’தக்கது.
000
Related posts:
|
|