சுற்றுலாத் துறைசார்ந்த 120 மில்லியன் பேர் வேலையிழக்கும் அபாயம் – எச்சரிக்கிறது ஐ.நா!

Wednesday, August 26th, 2020

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக் காரணமாக நாடுகளுக்கிடையிலான  போக்குவரத்து  நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதால் உலக நாடுகளின் சுற்றுலாத்  துறை வெகுவாகப்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் சர்வதேச சுற்றுலாத் துறைக்கு, 320 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது

அத்துடன் உலகளவில் சுற்றுலாத் துறைசார்ந்த 120 மில்லியன் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகவும்  ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: