பனிப்பாறைகளுக்கு மறைந்திருக்கும் இன்னொரு தேசம்..!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/625.0.560.320.160.600.053.800.668.160.90-16.jpg)
பூமியின் தென் துருவத்திற்கு அருகில் இதுவரை வரைபடத்தில் பதிவாகாத கண்டத்தை பதிவிடும் நடவடிக்கையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழுவொன்று ஈடுப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக பூமியின் தாழ்வான துருவத்தில் தங்கியிருந்து திடமான பனி பாறைகளின் கீழ் மறைந்துள்ள மர்மத்தை கண்டுபிடிக்க, அமெரிக்க ஆய்வு குழுவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
தற்போது வரையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் மீணடும் தென் துருவத்திற்கு சென்று பாரிய பனி பாறைகளுக்குள் மறைந்துள்ள மர்மத்தை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளர்.
புதிய கண்டத்தை உலக வரைபடத்தில் பதிவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.
ஆர்டிக்காவுக்கு அப்பால் இதுவரை வரைப்படத்தில் பதிவிடப்படாத பல முக்கிய தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
போலாகெப் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியினால் அதிக பணம் முதலீடு செய்து மேற்கொள்ளும் திட்டமாகும். செயற்கைக்கோள் ஊடாக பதிவாகாத பல தரவுகளை கண்டுபிடிப்பது இவர்களின் எதிர்பார்ப்பாகும்.
விரைவில் மறைந்திருக்கும் இன்னொரு தேசத்தை கண்டுபிடிக்கும் முயற்சி வெற்றி அளிக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Related posts:
|
|