5ஜி அலைவரிசை தொடர்பில் ஆராய குழு நியமனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/07/21july2019-vanews10.jpg)
முல்லைத்தீவில் 5ஜி தொழில்நுட்ப அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச சபை அமர்வில் இடம்பெற்ற பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து இந்த விடயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப குழு மற்றும் புத்திஜீவிகளை இணைத்து ஆராய்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இடம்பெற்றது. இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக சபையில் உள்ளவர்களுடைய கருத்துகளுக்காக இடமளிக்கப்பட்டது.
இந்நிலையில் சபையில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, மேற்படி குழுவை நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழிலாளர்களின் பிரச்சினைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 வீதத்தால் வீழ்ச்சி - பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!
”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கை...
|
|