அடுத்த மாதம் இரண்டாம் மற்றும் 3ஆம் திகதிகளில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதி!
Wednesday, August 30th, 2023இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்னாத் சிங் அடுத்த மாதம் இரண்டாம் மற்றும் 3ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான எண்ணெய் பரிமாற்றக் குழாய் அமைப்பை நிறுவும் பணிகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் குழாய் கட்டமைப்பு செயலிழப்பு: நட்டத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபையின் சாலை அமைக்கப்பட வேண்டும் - பிரதமரிடம் தவிசாளர் ஜெயகாந்த...
அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை - நாமல் ராஜபக்ஷ!
|
|