இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 வீதத்தால் வீழ்ச்சி – பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, August 1st, 2023

தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

நாடு டொலர் நெருக்கடியில் இருந்தபோது, ​​QR குறியீடு அறிமுகப்படுத்தியதன் பயனாக, ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு டொலரை பயன்படுத்த முடிந்தது.

QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 65 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: