22 ஆம் திகதி நாடாளுமன்றம் வருகின்றது 20 ஆவது திருத்தம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/09/parliament-2020-650x390-1.jpg)
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்
முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமாயின் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலம் வழங்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பினை அடுத்தே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
டெங்கு நோய்த்தொற்றை தடுக்க துரித நடவடிக்கை - யாழ். பொலிஸார்!
பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆசிரியர்களின் ஆதரவு அவசியம் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே வலியுறுத்து...
தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு - நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் என பொதுமக்கள் ப...
|
|
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துங்கள் - அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்களும் எச...
பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்த அனுமதியில்லை - பயன்படுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவர் - ப...
சிமெந்துக்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது - ஏனைய பொருட்களுக்குமான தட்டுப்பாடும் ...