புதிய இராணுவச் சோதனைச்சாவடிகளில் பொலிஸாரையும் இணைக்க உத்தரவு – மஹிந்த தேசப்பிரிய!

Thursday, October 10th, 2019


வடக்கு, கிழக்கில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவச் சோதனைச்சாவடிகளில் பொலிஸாரையும் கடமையிலீடுபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

செய்தியாசிரியர்களை சந்தித்துப் பேசியிருந்த அவரிடம் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் புதிதாக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர், இது தொடர்பான யோசனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும், ஆணைக்குழு இந்த யோசனையை அங்கீகரிக்கும் பட்சத்தில், ஒவ்வோர் இராணுவச் சோதனைச் சாவடியிலும் பொலிஸாரையும் பணியில் அமர்த்தப்படும்.

புதிதாக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டால் அதில் பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்துவதே சாலச் சிறந்தது என்றார்.

Related posts:


கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் யாழ்ப்பாணத்தில் வைபவ ரீதியாக முன்...
மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் - மத்திய வங்கியின் புதிய ஆளுநர் வலியு...