ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி முழுமையான ஆதரவு – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியின் முழுமையான ஆதரவுடன் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்ட்ட முதலாவது பாதீடான 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்றைய தினம் (09) வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் இறுதி நாளான இன்று காலை 9.30 முதல் மாலை 05 மணி வரை குழுநிலை விவாதம் நடைபெற்று மாலை 05 மணிக்கு வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
நிதியமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சுக்கள், அதனோடு தொடர்புடைய இரண்டு இராஜாங்க அமைச்சுக்கள் ஆகியவற்றின் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் இன்றையதினம் நடைபெற்றது.
விவாதங்களின் முடிவில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதிலளித்து உரையாற்றியிருந்தார். அதனையடுத்து வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு சபையில் நடைபெற்றது.
முன்பதாக 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 22 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றதுடன் அன்றையதினம் மாலை 5 மணிக்கு அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து நவம்பர் 23 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் ஆரம்பமானது. தொடர்ந்து இன்று டிசம்பர் 10 ஆம் திகதி வரை விவாதம் நடைபெற்று இன்று மாலை 5 மணிக்கு அதன் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறது.
இந்நிலையில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள இலங்கையின் நாடாளுமன்றில் ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் சார்பில் பாதீட்டுக்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் 97 மேலதிக வாக்ககளால் 2022 ஆம் அண்டக்கான பாதிடு நிறைவெற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|