வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுங்கள் – முச்சக்கர வண்டி சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/10/download-4-12.jpg)
வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார், முச்சக்கர வண்டி மற்றும் போக்குவரத்து சேவை வழங்கும் வாடகை முச்சக்கர வண்டி சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முறையை இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் முச்சக்கரவண்டிகளில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகள் தொடர்பிலும் பதிவொன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்கள் வாகனத்தில் பயணித்தவர் யார் என்பதனை அறிந்து கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் எந்த இடத்தில் ஏறினார்கள், எந்த இடத்தில் இறங்கினார்கள் என்பதனை கையடக்க தொலைபேசியில் அல்லது புத்தகம் ஒன்றில் குறித்து வைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த மாதத்தில் 1063 டெங்கு நோயாளர்கள் - சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு!
இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயார் - இலங்கைக்கான பதில் சீன தூத...
ஐந்து மாதங்களில் 53 வீத நிலுவைத் பில்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...
|
|